search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை சாவு"

    • பள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை சில மணிநேரத்திலேயே இறந்து விட்டது.
    • தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கோப்பம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்த வாலிபர் சிறுமியிடம் அத்துமீறி பலாத்காரம் செய்துள்ளார்.

    இதனால் 10ம் வகுப்பு படித்து வரும் சமயத்திலேயே அவர் கருவுற்றார். அவரது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்து பெற்றோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது சிறுமி கருவுற்றிருந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட வாலிபரிடம் கேட்ட போது திருமணம் செய்து கொள்வதாக கூறி பின்னர் தலைமறைவாகி விட்டார்.

    இந்நிலையில் சிறுமியின் கருவை கலைக்க முடியாததால் அவருக்கு நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த சில மணிநேரத்திலேயே அது இறந்து விட்டது. இதனிடையே 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தி கற்பழித்த வாலிபர் விவரம் கேட்டபோது நடந்தவற்றை அவர் கூறியுள்ளார்.

    பின்னர் வடமதுரை போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

    வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இதேபோல மைனர் பெண்கள் கருவுற்று பின்னர் கலைக்க முடியாமல் உடல்நிலை பாதிக்கப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. சமரசம் செய்து திருமணம் நடத்தி வைக்கலாம் என குடும்பத்தினர் முடிவு செய்தால் அந்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுகிறார். இதனால் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் வாலிபர்கள் திருமணத்திற்கு மறுத்து தப்பியோடி விடுகின்றனர்.

    சமூக நலத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இளம் வயது திருமணம், போக்சோ குறித்த அறிவுரைகள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி கீழே விழுந்தது.
    • பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவருக்கு 1 ½ வயதில் துருவன் என்ற குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தது. உடனே பெற்றோர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியில் திடீரென்று தவறி விழுந்தது.
    • குழந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பசுவராஜ். இவருக்கு 3 வயதில் உமாபதி என்ற மகனும் உள்ளது. இந்த குழந்தை வீட்டின் அருகே சம்பவத்தன்று விளையாடி கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியில் திடீரென்று தவறி விழுந்தது. இதில் குழந்தை நீரில் மூழ்கி பரிதபாமாக இறந்தது.

    இதுகுறித்து பசுவராஜ் சூளகிரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று குழந்தை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தது.
    • அப்போது குழந்தையை அடையாளம் தெரியாத விஷபூச்சி கடித்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள சின்னமுரசுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகன்டன். இவருக்கு 5 வயதில் சந்ரு என்ற குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று குழந்தை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தது. அப்போது குழந்தையை அடையாளம் தெரியாத விஷபூச்சி கடித்தது.

    இது குறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் சந்ருவை சிகிச்சைக்காக தருமபுரி அரசு கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

    இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பாத்திரத்தில் வைத்திருந்த வெந்நீர் ரித்திகா மீது கொட்டியது.
    • இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து புங்கம்பள்ளி கைகாலன் குட்டை பகுதி யை சேர்ந்தவர் செல்ல ப்பாண்டி (வயது 27). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சத்யா (24). இவர்களுடைய மகள் ரித்திகா (3).

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி சத்யா வீட்டுக்கு வெளியே வெந்நீர் போட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ரித்திகா அங்கு யாரும் இல்லாத போது பாத்திரத்தில் இருந்து வெந்நீர் எடுக்க முயன்றார்.

    அப்போது ரித்திகா திடீரென பாத்திரத்தில் வைத்திருந்த வெந்நீர் அவர் மீது கொட்டியது. இதனால் ரித்திகா அலறி துடித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து ரித்திகாவை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த ரித்திகா சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குழந்தைகளை பாட்டியிடம் விட்டு விட்டு தாய், தந்தை இருவரும் கட்டிட வேலைக்காக பெங்களூருக்கு சென்று வேலை பார்த்து வந்தனர்.
    • விளையாடிக் கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை ரஞ்சித் வீட்டின் அருகே இருந்த விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி சாலா. இவர்களுக்கு திருமணமாகி 10 வருடம் ஆகிறது.

    இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ரஞ்சித் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

    குழந்தைகளை பாட்டியிடம் விட்டு விட்டு தாய், தந்தை இருவரும் கட்டிட வேலைக்காக பெங்களூருக்கு சென்று வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை ரஞ்சித் வீட்டின் அருகே இருந்த விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தது.

    இது குறித்து தகவலறிந்த பாலக்கோடு போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வீட்டில் திலக் விளையாடிக் கொண்டிருக்கும் போது தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.
    • கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள ஓமேத பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு 3 வயதில் திலக் என்கிற குழந்தை இருந்தன.

    சம்பவத்தன்று வீட்டில் திலக் விளையாடிக் கொண்டிருக்கும் போது தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

    உடனே பெற்றோர்கள் குழந்தையை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது.

    இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சாக்ரடீஸ் என்பவர் தர்ஷித்தை தூக்கி சென்றார்.
    • கால்வாயை தாண்டும் போது எதிர்பாராத விதமாக சாக்கடைக்குள் இருவரும் தவறி விழுந்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள செல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. இவருக்கு 2 வயதில் தர்ஷித் என்கிற 2 வயது குழந்தை இருந்தன.

    சம்பவத்தன்று தெருவில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும் போது இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சாக்ரடீஸ் என்பவர் தர்ஷித்தை தூக்கி சென்றார்.

    அப்போது கால்வாயை தாண்டும் போது எதிர்பாராத விதமாக சாக்கடைக்குள் இருவரும் தவறி விழுந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு தர்ஷித்தை சிகிச்சைக்காக அரூர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மகன் மித்ரன்(3). நேற்று முன்தினம் இவரது வீட்டின் தோட்டத்தில் மித்ரன் விளையாடிக் கொண்டிருந்தான்.
    • அப்போது பாம்பு கடித்தது.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த துணிசரமேடு பகுதியை சேர்ந்தவர் திருஞானம் (வயது 37) இவரது மகன் மித்ரன்(3). நேற்று முன்தினம் இவரது வீட்டின் தோட்டத்தில் மித்ரன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பாம்பு கடித்தது. உடனடியாக சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதனை செய்தபோது அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து சிதம்பரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 6நாட்களான முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது.
    • குழந்தைக்கு பாலுட்டிய போது மூச்சுதனறி இறந்துள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள சிந்தகம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ்(வயது31) இவரது மனைவிக்கு கடந்த 6நாட்களான முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் குழந்தைக்கு பாலுட்டி உள்ளார். அப்போது குழந்தைக்கு மூச்சுதனறி இற்துள்ளது. பின்னர் இது குறித்து ஜெய்பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்ககு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்

    • குழந்தைக்கு லேசான காய்ச்சல் இருந்து வந்தது.
    • அந்த குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற் பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள வெள்ளி திருப்பூர் வெள்ள கரட்டூர் பகுதியை சேர்ந்த வர் பாலசுப்பிரமணியம் (வயது 29). கட்டிட தொழி லாளி. இவரது மனைவி சித்ரா (25).

    இவர்களுக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு லேசான காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் வீட்டிலேயே வைத்து மருத்துவம் பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் அந்த குழந்தைக்கு நேற்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற் பட்டது. இதையடுத்து உடன டியாக குழந்தையை சிகி ச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தை யை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • ராஜபாண்டி- சுபாஷினி இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.
    • பால்குடித்து தூங்கிய குழந்தைக்கு திடீரென மூச்சுத்தினறல் எடுத்தது,

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வல்லம் கிராம த்தைச் சேர்ந்தவர் ராஜ பாண்டியன். இவரது மனைவி சுபாஷினி இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று வழக்கம்போல் குழந்தைக்கு சுபாஷினி பால் கொடுத்துவிட்டு அருகில் தூங்க வைத்திருந்தார். அப்போது குழந்தைக்கு திடீர் என மூச்சு திணறல் ஏற்பட்டது.

    உடனே அந்த குழந்ைதயை நெய்வேலி மத்திய பொது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை க்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தன இது குறித்து முத்தா ண்டிகுப்பம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் வெங்க டேசன் வழக்குபதிந்து விசாரணை நடத்தினார்.

    ×